திருகோணமலைக்கு ரோட்டரி ஆளுநர் வருகை

                                            (அப்துல்சலாம் யாசீம்)
ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் வண. சோமவம்ச தேரர் நேற்று (04) திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

உதவி ஆளுநர் திரு சிவபாதசுந்தரம் அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் – திரு நீல் போர்ஹேம் விருந்தினர்களை வரவேற்றார் .

செயலாளர் ஜெயசங்கர் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

ஒரு புதிய உறுப்பினர் வைத்திய கலாநிதி சௌந்தரராஜன் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்.

இரண்டு துவி சக்கர வண்டிகள் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்து கல்லூரியின் இரண்டு மாணவர்களுக்கு தங்கள் படிப்பை மேம்படுத்த வழங்கப்பட்டது.

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் திருகோணமலை மாவட்த்தில் சிறந்த பெறுபேறு பெற்ற ஸ்ரீ ஷண்முக பெண்கள் கல்லூரியை சேர்ந்த செல்வி சந்தியா பார்த்திபன் அவர்களுக்கு பரிசு வழங்கி கௌரிவக்கப்பட்டார்.

ஆளுநர் வண. சோமவம்ச தேரர் திருகோணமலை ரோட்டரி கிளப் நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.