அம்பாரை மாவட்ட விவசாயிகள் அமைப்பின் விசேட இப்தார் நிகழ்வு நேற்று (18) மாலை சாய்ந்தமருது பிஸ்மில்லாஹ் றெஸ்டுறன்டில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று குவாஸி நீதிபதியும், அம்பாரை மாவட்ட விவசாயிகள் அமைப்பின் தலைவருமான எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களும், அம்பாரை மாவட்ட முதன்நிலை விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
இப்தார் நிகழ்வைத் தொடர்ந்து 'எதிர்காலத்தில் தமது அமைப்பு, ஏழை மக்களின் வாழ்வாதாரத்;தை எவ்வாறு முன்னேற்றமடையச் செய்வதற்கான தொழில் முயற்சிகளுக்கு உதவ முடியும்' என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது.








Post a Comment