சமுதாயத்தை ஏமாற்றி வாழ நினைத்த சானக்கிய தலைமை பதவியை இழக்கும் நிலைக்கு வந்து விட்டது..!
ஹக்கீமை பின் தொடர்ந்தால் மக்கள் எம்மை புறக்கணித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஹக்கீமை புறக்கணித்து தமது அரசியல் வாழ்வை இஸ்திரப்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முயற்சி செய்வதாக அறிய முடிகிறது
கடந்த வாரம் அம்பாறையில் நடைபெற்ற தேசிய நீர் வழங்கல் சபையால் நடைபெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இடையில் வெளியேறி விட்டார்
அடுத்து அன்மையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு கன்டியில் ஒரு கூட்டம் நடைபெற்றது அதில் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என அறிய முடிகிறது
ஒருத்தனின் சுயநலத்துக்காக நமது அரசியல் வாழ்க்கையை ஏன் வீனாக்க வேண்டும் என இப்போது தான் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் சிந்திக்கின்றனர் பாராட்டக் கூடிய விடயம்
இவைகளை நன்கு சிந்தித்தால் எதிர்வரும் காலங்களில் மகாஓயா பதியதலாவை போன்ற ஊர்களில் தான் இனி ஹக்கீம் அவர்களின் கூட்டம் நடைபெறும் நிலை வரலாம்
என்ன செய்வது தன் வினை தன்னை சூடும் என்பது போல் அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்பது ஹக்கீம் நானாவை இப்போது தான் தெய்வம் பார்க்க ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது இனி சமுதாயத்தை ஏமாற்றி வாழ நினைத்த சானக்கியம் இன்று தலைமை பதவியை இழக்கும் நிலைக்கு வந்து விட்டது எல்லாம் அவன் செயல் மக்களுக்கு புரியவைப்பது எங்கள் செயல்
ஜெமீல் அகமட்

Post a Comment