ஆர்டரை ரிட்டன் செய்த பெண்ணை செக்ஸுக்கு அழைத்த டெலிவரி பாய்..!!





டெலிவரி செய்த உணவு சரியில்லை என திருப்பி அனுப்பிய இளம்பெண்ணின் செல்போன் எண்ணை,பாலியல் தொழிலாளி என கூறி வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 8-ஆம் தேதி இரவு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகள் வந்துள்ளன.அதில் பேசிய பலரும் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியது மட்டுமின்றி,அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என நினைத்து செக்சுக்கு கட்டணம் எவ்வளவு எனவும் விசாரித்துள்ளனர்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண்,காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.


அந்த பெண்ணின் செல்போனிற்கு வந்த அழைப்புகளை விசாரித்த போது,வாட்ஸ் அப் குழு ஒன்றில் பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டு அந்த பெண்ணின் எண் பகிரப்பட்டிருந்தது தெரிய வந்தது.இந்த செயலை செய்தது 20 வயதான ஸ்ரேயாஸ் என இளைஞன் எனவும்,அவன் மெக்டொனால்டு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்வதும் தெரியவந்தது.அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.


கடந்த எட்டாம் தேதி மொபைல் அப்ளிகேசன் ஒன்றின் வழியாக, மெக்டொனால்ட் நிறுவனத்தில் அந்த இளம்பெண் உணவு ஆர்டர் செய்துள்ளார்.அதனை அவர் வீட்டில் ஸ்ரேயாஸ் டெலிவரி செய்துள்ளான்.ஆனால் டெலிவரி செய்யப்பட்ட உணவு சரியில்லை என்று கூறி அதை அவர் திருப்பி அளித்துள்ளார்.இதனால் கோபமடைந்த ஸ்ரேயாஸ்,அந்த பெண்ணிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்து,வாட்ஸ் அப் குழுவில் பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டு இந்த பெண்ணின் செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார்.அதன் பின்னரே அந்த பெண்ணுக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துள்ளன.இதனை தொடர்ந்து ஸ்ரேயாஸ் மீது வழக்கு பதிவு செய்த போலிசார்,அந்த பெண்ணின் செல்போனுக்கு அழைத்து,ஆபாசமாக பேசியவர்களையும் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.