பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் அல்ல என அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நீதிமன்ற வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் எனவும் அக்கட்சியின் உறுப்பினர் என ஊடகங்களில் எழுதுமாறும் கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் செய்தியாளர்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

Post a Comment