நிந்தவூரில் 10 வயது சிறுமி தூக்கிட்டுத் தொங்கியதாக தெரிவிப்பு!

சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                                        ( நமது விசேட நிருபர்  )
நிந்தவூரில் 10 வயது சிறுமி தூக்கிட்டுத் தொங்கியதாக, தொங்கியவரின் அம்மம்மாவினால் தெரிவிக்கப்படுகிறது. 

நிந்தவூர் - 21, தியேட்டர் வீதியைச் சேர்ந்த சூர்தீன் சப்னா( வயது 10) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக தூக்கில் தொங்கி மரணத்தைத் தழுவியவராவார்.

இவரது சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரியவருவதாவது:- 
மருதமுனையைச் சேர்ந்த சூர்தீன் என்பவருக்கும், நிந்தவூரைச் சேர்ந்த அலியார் ஜவாஹிறா என்பவருக்கும் மகளாகப் பிறந்தவரே மறணத்தைத் தழுவிக் கொண்ட சூர்தீன் சப்னா என்பவராவார்.

சூர்தீன் சப்னாவின் பிறப்பின் பின்னர் சூர்தீனும், ஜவாஹிறாவும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து, சூர்தீன் வேறு திருமணஞ் செய்து கொண்டார். ஜவாஹிறா வெளிநாடு சென்று விட்டார். 
குழந்தை சூர்தீன் சப்னாவை இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது அம்மம்மா இப்றாலெவ்வை ஆசியா உம்மா(65) எடுத்து வளர்த்து வந்துள்ளார். சப்னாவை வளர்த்ததோடு கல்வி கற்பிக்கவும் செய்துள்ளார். சப்னா இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும் எழுதியுள்ளார்.

சம்பவ தினத்தன்று அம்மம்மா கொடுத்த அப்பத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு, பிள்ளளைகளுடன் விளையாடிக் கொண்டு நின்ற சப்னாவை சிறிது நேரத்தின் பின்னர் காணாது தேடியபோது வீட்டின் அறையினுள் தொங்கிய நிலையில் கண்டு, மீட்டு வைத்திய சாலைக்குக் கொண்டு வந்ததாக சப்னாவின் அம்மம்மா இப்றாலெவ்வை ஆசியா உம்மா வைத்தியசாலையிலும், ஊடகவியலாளர்களிடமும் தெரிவித்தார்.

பி.ப. 12.50 மணிக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட சடலம் தற்போது பி.ப.3.58 மணிவரை( செய்தி அச்சிக்குப் போகும் வரை பொலிஸ் விசாரணைகளின்றி வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது).

இன்று இரவு 8.30 மணியளவில் சடலத்தைப் பார்வையிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி சபீர் அஹமட் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
18.08.2019 இன்று!!! 
பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரவு கொண்டு செல்லப்பட்ட சடலம் (இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை பி.பகல் 2.45 மணிவரை) பிரேத பரிசோதனைகள் இடம்பெறாத நிலையிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.