நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், நிந்தவூர்ப் பிரதேச பாலர் பாடசாலைகளுக்க்pடையில் அண்மையில் நடாத்தப்பட்ட 'உற்பத்தித் திறன் விருது வழங்கல் போட்டியில்' சங்கைக்குரிய உலமா அஸ்சேஷ்.எம்.ஐ.எம்.ஹிதாயத்துல்லாஹ் மௌலவி அவர்களைத் தலையாகக் கொண்டு இயங்கிவரும் 'அல்-ஹஸனாத் பாலர் பாடசாலை' முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அப்துல் சலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும், உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம்.அன்சார் நளீமி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
உற்பத்தித் திறன் விருது வழங்கல் போட்டி 2017ல் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மொத்தம் 28 பாலர் பாடசாலைகள் பங்கு கொண்டன. அதில் அல்-ஹஸனாத் பாலர் பாடசாலை முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.











Post a Comment