(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாண்டிருப்பு துரௌபதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை 26.09.2017 இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பயணித்த வாகனத்துடன் சிறிய ரக வாகனம் மோதுண்டதில் சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் பலத்த சேதத்திற்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment