அரசை விட்டு விலகத் தயார் -அமைச்சர் ரிஷாத் அதிரடி அறிவிப்பு

வில்­பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அபகரிக்கும் முயற்சியே இது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வ­ரு­ம் அமைச்சருமான ரிஷாட் பதி­யுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனா­தி­பதி தனது பிழை­யான முடி­வினை மாற்­றிக்­கொள்­ளா­விட்டால் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு முஸ்­லிம்கள் சார்பில் ஐக்­கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்­ப­தற்கு தயா­ராக இருக்­கிறேன் என கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.


ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வந்தால் எமக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை ஜனாதிபதி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.