ஜெமீல் அஹமட்
இது வரைகாலமும் றவூப் ஹக்கீமை அழைத்து கல்லுரியின் விழாக்களை கொண்டாடும் கன்டி மஃமுத் மகளிர் கல்லுரியின் நிர்வாகமும் மக்களும் 13/10/2013 இன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு ஹக்கீமை அழைக்காமல் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அவர்களை பிரதம அதிதியாக அழைத்து கல்லுரியின் விழாவை நடத்தியுள்ளனர் மிகவும் சந்தோஷப்படக் கூடிய விடயம்
கன்டியில் ஒரு கட்சியின் தலைவர் அதிகாரம் கொண்ட அமைச்சர் இருக்கும் போது வண்னியிலிருக்கும் அரசியல்வாதியை அழைத்து விழா நடத்துவது என்றால் இதன் காரணம் என்ன என்பதை நாட்டு மக்கள் இன்று சிந்திக்கின்றனர் காலம் தான் பதில் சொல்லும்
இதுவரை காலமும் ஹக்கீம் ஒரு இனத்தின் பெயர் முஸ்லிம் என்ற சொல்லை அடையாளப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்ததால் மக்கள் அவரை கௌரவப்படுத்தினர் நாளடைவில் ஹக்கீம் சமுதாயத்தை ஏமாற்றுவது பொய் வாக்குறுதி நயவஞ்சகம் போன்ற இஸ்லாம் விரும்பாத விடயங்களை தொடந்து செய்வதால் முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஹக்கீம் காங்கிரஸ் கட்சியாக மாறி விட்டது அதனால் இன்று அவரது மாவட்ட கன்டி மக்களே ஹக்கீமை தூக்கி ஏறிந்து விட்டனர் இது போல் முஸ்லிம்களின் முதுகெலும்பாக உள்ள அம்பாறை மாவட்டத்தில் கூட ஹக்கீம் எதிர் காலத்தில் காலடி வைக்க முடியாது
இப்படியான நிலையில் இருப்பவரை வரவேற்பதை விட சமுதாயத்துக்காக தனது உயீரை கூட மதிக்காமல் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் சிந்தனையில் சமுதாய அரசியல் செய்யும் சத்திய தேசிய தலைவர் றிசாத் அவர்களை கன்டி மக்கள் வரவேற்றுள்ளனர் இதனால் இன்று முஸ்லிம் சமுதாம் சத்திய தேசிய தலைவராக அமைச்சர் றிசாத் அவர்களை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது உறுதியாகி விட்டது அவர் இனி வண்னி அல்ல கன்டியிலும் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் வல்லமை கொண்ட சத்திய தேசிய தலைவராக உள்ளார் என்பதையிட்டு மக்கள் பெருமையாடைகின்றனர்
அதுமட்டுமல்ல இன்று கன்டி உலமா சபை கூட அமைச்சர் றிசாத் அவர்களை சந்தித்து சமுதாயதின் பல பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளனர் இனிமேல் முஸ்லிம் மக்களின் ஏக தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் உலமா சபை கூட சத்திய தேசிய தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றால் அல்லாஹ்வுக்கு பிடித்த அரசியல்வாதி றிசாத் என்று தான் கூற வேண்டும் அதனால் அவர் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு தலைவர் என்ற பதவியை அல்லாஹ் கொடுத்துள்ளார் அதை மக்களும் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் சத்திய தேசிய தலைவர் றிசாத் அவர்களின் தலைமையில் அரசியல் செய்யும் காலத்தை அல்லாஹ் உருவாக்குவான்
எனவே ஹக்கீம் காங்கிரஸ் உறுப்பினர்களே இனியாவது யார் தலைவர் என்பதை சிந்தித்து கொள்ளுங்கள்




Post a Comment