முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டுவதற்கு இன்று சர்வதேச ரீதியில் முயற்சி இடம்பெறுகின்றது. இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினையும் அதனை எவ்வாறு கையாள்வது என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் சர்வதேச சமூகம் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டும்.
உலமாக்களும் தலைவர்களும் ஒன்றுபடுகின்ற போதே தங்களது தஃவா பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும், முஸ்லிம்நாடுகளையும் அழித்தொழித்து முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்துவதினூடாக இஸ்லாத்தினுடைய வளர்ச்சியை தடுப்பதற்கும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டுவதற்கும் இன்று சர்வதேச ரீதியில் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக முழு சர்வதேச முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். உலமாக்களும், முஸ்லிம் தலைவர்களும், கல்விமான்களும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சதிகளை முறியடிக்க முடியும் என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இந்தோனேசியா அரசினாலும் இதனை ஏற்பாடு செய்த அல்மனாரத்துல் இஸ்லாமிய சர்வேதேச அமைப்பினாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு இதில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்ததோடு மக்காவில் உள்ள இமாம்களால் இராஜாங்க அமைச்சர் விசேட போர்வை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

Post a Comment