கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) ஹோமாகம பிரதேசத்தில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம கிறீன் கார்டன் பகுதியில் 60 வயதான குறித்த பெண் தனியாக வசித்து வந்ததாகவும், அவர் வசித்து வந்த வீட்டிலேயே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment