தங்கொடுவ பகுதியில், வான் ஒன்றுக்குள் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (11), வான் ஒன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகின ..
சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் அடிப்படை விசாரணையில் இக்கொலையின் பின்னணியில் பாரிய கப்பம் எடுத்த சம்பவம் ஒன்று உள்ளதாக தெரிய வருகிறது.
குற்றவாளிகள் இந்த படுகொலைகளை செய்து உடல்களை வேனில் போட்டு பெட்ரோல் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து தீ வைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment